×

சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை

 

கூடலூர், அக்.17: கூடலூர் வட்டம் தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பாடந்துறை கிராமத்தில் பாடந்துறை முதல் கர்கப்பாளி வரை செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சுமார் 800 மீட்டர் தூர சாலை மிக மிக மோசமாக உள்ளதால் விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. இப்பகுதியில் சாலையில் இருபுறமும் அதனை ஒட்டியும் ஏராளமான குடியிருப்புகள் வியாபார நிலையங்கள் உள்ளன. செலுக்காடி, ஆலவயல், கணியம் வயல், மூச்சுக்கண்டி, சோமன்துறை, புழுக்கொல்லி 15க்கும் மேற்பட்ட சிறு கிராமங்கள் மற்றும் ஆதிவாசி காலனிகளிளில் வசிக்கும் ஏராளமான பொது மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். நான்கு அரசு பள்ளிகள் ஒரு தனியார் பள்ளி ஆகியவையும் உள்ளன.
தனியார் பேருந்துகள், பள்ளி பேருந்துகள், மற்றும் விவசாய பொருட்கள் எடுத்துச்செல்லும் வாகனங்கள் என ஏராளமான வாகனங்களும் இந்த சாலையில் சென்று வருகின்றன. இந்த சாலையில் வாகனங்களை இயக்க வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி சாலையின் நிலைமை மேலும் மோசம் அடைந்து வருகிறது. நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ள இந்த சாலையை முறையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறைக்கு பொதுநல அமைப்புகள், இப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kudalur ,Patanturai ,Karkappali ,Devar Solai ,Kudalur district ,Dinakaran ,
× RELATED கூடலூர் அருகே கோயில் அருகே உலா; ‘போ கணேசா’ எனக்கூறி யானையை அனுப்பிய மக்கள்