×

ஓடையில் மண் அள்ளிய டிராக்டர் பறிமுதல்

இடைப்பாடி, ஜூலை 7: இடைப்பாடி அடுத்த பக்கநாடு பகுதியில் அனுமதியின்றி ஓடையில் மண் அள்ளி வருவதாக பூலாம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்ஐ வீரமுத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்றபோது, அடுவா பட்டியை சேர்ந்த ஏழுமலை மற்றும் அவரது மகன் காமராஜ்(34) ஆகியோர், மேட்டு தெரு வாட்டர் டேங்க் அருகில் உள்ள ஓடையில் அனுமதியின்றி டிராக்டரில் மண் அள்ளிக் கொண்டிருந்தனர். ஏழுமலை, காமராஜ் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் காமராஜை ைகது செய்தனர். மண் பாரத்துடன் டிராக்டர் கைப்பற்றப்பட்டது.

The post ஓடையில் மண் அள்ளிய டிராக்டர் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Eadpadi ,Poolampatti ,SI Weeramuthu ,Etummalai ,Adua Patti ,
× RELATED டூவீலரை திருடி சென்ற 2 பேரை விரட்டி பிடித்த பொதுமக்கள்