×

ஏர்வாடி மாட்டு தரகர் மாயம்

ஏர்வாடி, ஜூலை 6: ஏர்வாடியில் மாட்டு தரகர் மாயமானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏர்வாடி அருகேயுள்ள தளபதிசமுத்திரம் கீழூரை சேர்ந்தவர் சண்முகவேல் மகன் கண்ணன் (34). மாட்டு தரகர். இவரது மனைவி சுப்ரியா (23) இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஏப்.16ம் தேதி கண்ணன் மாட்டு வியாபாரத்திற்காக குமரி மாவட்டம் மார்த்தாண்டத்திற்கு சென்றுவருவதாக தனது மனைவியிடம் கூறி சென்றார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் பதறிய அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கண்ணனை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது மனைவி சுப்ரியா ஏர்வாடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணன் (பொறுப்பு) வழக்கு பதிவு செய்து கடந்த 3 மாதமாக அவர் எங்கு உள்ளார்?, அவரது கதி என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post ஏர்வாடி மாட்டு தரகர் மாயம் appeared first on Dinakaran.

Tags : Aerwadi Cattle ,Mayam ,Airwadi ,Shanmugavel ,Kannan ,Thalapathisamudram Keezur ,Supriya ,
× RELATED மோட்டார், மின் வயர்கள் மாயம் அரியலூர் மயானம் சீரமைக்கப்படுமா?