சென்னை: கோயம்பேடு மெட்ரோ சோன் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்தக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி போடப்படாத தெரு நாய்களை அப்புறப்படுத்தக் கோரி குடியிருப்பில் வசிக்கும் ஷபீனா பாத்திமா என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். நாய்களை பிடித்துச் செல்ல மாநகராட்சி ஊழியர்கள் வந்தாலும் சமூக ஆர்வலர்கள் எனக்கூறி சிலர் தடுப்பதாக புகார் எழுந்துள்ளது. நாய்களை துன்புறுத்துவதாக கூறி ப்ளூ க்ராஸ் அமைப்பு மூலம் வழக்கு தொடருவோம் என ஊழியர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக மனு தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரு நாய்களை அப்புறப்படுத்தக் கோரிய விண்ணப்பித்தை பரிசீலிப்பதாக ஐகோர்ட்டில் மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
The post கோயம்பேடு பகுதியில் தெரு நாய்களை அப்புறப்படுத்தக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு..!! appeared first on Dinakaran.