×

இளம்பிள்ளை அருகே சாலைவிரிவாக்கப்பணிக்காக ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்: மூதாட்டி எதிர்ப்பால் பரபரப்பு

இளம்பிள்ளை:சேலம் மாவட்டம் இளம்பிள்ளை -சித்தர் கோயில் சாலையில் நல்லணம்பட்டி வளைவு பகுதியில் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறையினர் இந்த சாலையை விரிவுபடுத்த திட்டமிட்டனர். அதன்படி, சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது. இங்கு சாலையோரம் 10க்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமிப்பில் இருந்தன. நெடுஞ்சாலைத்துறையினர் இந்த ஆக்கிரமிப்பு வீடுகளை, தாங்களாக முன்வந்து அகற்றிக்கொள்ளுமாறு, ஏற்கனவே அதன் உரிமையாளர்களுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அவர்கள் வீடுகளை அகற்றவில்லை. இந்நிலையில் நேற்று சாலை விரிவாக்கப்பணிக்காக சாலையோர ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும்பணியை நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டனர். போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் கொண்டு வீடுகளை அகற்றும் பணி நடைபெற்றது. நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சந்தோஷ்குமார், உதவி பொறியாளர் சௌந்தர்யா, சங்ககிரி மண்டல துணை தாசில்தார் ஜெயக்குமார், மகுடஞ்சாவடி ஆர்ஐ செல்வராஜ், இடங்கணசாலை விஏஓ(பொ) முனியப்பன், மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் இளங்கோ, எஸ்.ஐக்கள் பெரியசாமி, ரகு மற்றும் 30க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த பொன்னப்பன் மனைவி சின்னப்பொண்ணு(71) என்பவர், தனது வீட்டிற்கு நஷ்டஈடு வழங்கினால் மட்டுமே, வீட்டை காலி செய்வேன் எனக்கூறி எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், வீட்டை இடித்தால் தற்கொலை செய்து கொள்வதாகவும் மிரட்டல் விடுத்தார். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு முயன்றபோதும் அவர் தனது கணவருடன் வீட்டிற்குள் இருந்து வெளியே வர மறுத்துவிட்டார். இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசார், சின்னப்பொண்ணுவை வலுக்கட்டாயமாக வீட்டில் இருந்து வெளியேற்றினர். தொடர்ந்து ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது….

The post இளம்பிள்ளை அருகே சாலைவிரிவாக்கப்பணிக்காக ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்: மூதாட்டி எதிர்ப்பால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Nallanampatti Bend ,Salem District Young Child-Sitter Temple Road ,Ancestor Stir ,
× RELATED ரயிலில் இருந்து கர்ப்பிணி...