- கள்ளக்குறிச்சி
- தேமோதிகா
- பிரேமலதா
- சென்னை
- DMUDI
- பொதுச்செயலர்
- கல்லாக்கிரிச்சி மாவட்டம்
- தேசிய முற்போக்கு
- திராவிட கஜகம்
- தின மலர்
சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்ட அறிக்கை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டோர் உயரிழந்துள்ளனர். இதை தடுக்க தவறிய அரசின் நிர்வாகச் சீர்கேட்டை கண்டித்து தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் சார்பாக வரும் 25ம் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 10 மணி அளவில் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க இருக்கிறது.
இதில் மாவட்ட செயலாளர்கள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், அனைத்து ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணி, பொதுமக்கள் என அனைவரும் பெருமளவில் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றி ஆர்ப்பாட்டமாக நடத்தி தர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
The post கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம்; வரும் 25ம் தேதி தேமுதிக ஆர்ப்பாட்டம்: பிரேமலதா அறிவிப்பு appeared first on Dinakaran.