×

திருநங்கைகளுக்கு நாளை நலத்திட்ட உதவிகளை பெற சிறப்பு முகாம்

சிவகங்கை, ஜூன் 20: சிவகங்கை கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:சிவகங்கை கலெக்டர் அலுவலக மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் சமூக நலத்துறை மற்றும் இதர நலத்திட்ட சேவைகள் வழங்கும் துறைகளின் சார்பில் சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள திருநங்கைகளுக்கான ஒரு நாள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இம்முகாமில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கைகள், திருநங்கையர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை மற்றும் ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகிய நலத்திட்ட சேவைகளைப் பெற உரிய சான்றாவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். இம்முகாம் தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு 04575 240426 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 88838 67926 என்ற செல் எண்ணிலோ தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post திருநங்கைகளுக்கு நாளை நலத்திட்ட உதவிகளை பெற சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Collector ,Asha Ajith ,Sivagangai Collector's Office District Development Forum ,
× RELATED செவிலியர் பயிற்சிக்கு செல்பவர்கள் வெளிநாட்டு மொழிகள் கற்க வாய்ப்பு