×

கணவன் கண்முன் பரிதாபம் லாரி மோதி பெண் பலி

பெரம்பூர்: செங்குன்றம் காரனோடை பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மனைவி பரிமளா (40). தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். நேற்று, பிரேம்குமார் தனது மனைவியுடன் பைக்கில் எருக்கஞ்சேரி ஐயப்பா திரையரங்கம் எதிரே சாலையில் சென்றபோது, அவ்வழியே வந்த மாநகராட்சி குப்பை லாரி மோதியதில் இருவரும் தடுமாறி சாலையில் விழுந்தனர். இதில், பிரமிளாவின் மீது லாரி ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிரேம்குமார் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதை பார்த்த பொதுமக்கள், குப்பை லாரி டிரைவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மங்கள் என்பவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொடுங்கையூர்  போலீசார் மற்றும் கொடுங்கையூர் போக்குவரத்து போலீசார், பிரேம்குமாரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரமிளாவின் உடலை கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், லாரி டிரைவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், ‘போக்குவரத்து போலீசார் இப்பகுதியில் தொடர்ந்து வாகனங்களை நிறுத்தி சோதனை செய்வதுடன், கனரக வாகனங்களை பல மணி நேரம் நிறுத்தி வைப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, விபத்துகள் அதிகரித்து வருகிறது. மேலும், விபத்து நடைபெற்ற இடத்தில் சாலையின் இருபுறமும் நடைபாதையில் 30க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்வதும், அதனால் விபத்தில் சிக்குவதும் வாடிக்கையாக உள்ளது,’ என்றனர்….

The post கணவன் கண்முன் பரிதாபம் லாரி மோதி பெண் பலி appeared first on Dinakaran.

Tags : Perambur ,Premkumar ,Sengkunram Karanodai ,Parimala ,Dinakaran ,
× RELATED பெரம்பூர் ரமணா நகர் பகுதியில் மெட்ரோ...