×

குவைத்திலிருந்து காலை 10.30 மணிக்கு விமானம் கொச்சி வருகிறது

கொச்சி: குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 45 பேரின் உடல்கள் விமானப்படை விமானத்தில் காலை 10.30 மணியளவில் கொச்சி கொண்டு வரப்படுகிறது. விமானத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேரின் உடல்கள், கேரளாவைச் சேர்ந்த 23 பேரின் உடல்கள், கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரது உடல் கொண்டு செல்லப்பட உள்ளது. விமானம் மூலம் 45 பேரின் உடல்கள் கொண்டுவரப்படும் நிலையில் 31 பேரின் உடல்கள் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. குவைத்திலிருந்து விமானம் மூலம் கொண்டு வரும் 31 உடல்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

The post குவைத்திலிருந்து காலை 10.30 மணிக்கு விமானம் கொச்சி வருகிறது appeared first on Dinakaran.

Tags : Kuwait ,Kochi ,Kuwaiti ,Tamil Nadu ,Kerala ,Karnataka ,
× RELATED குவைத் தீ விபத்தில்...