×

பி.இ விண்ணப்ப பதிவு நிறைவு: 2 லட்சத்து 53 ஆயிரத்து 954 பேர் விண்ணப்பம்

சென்னை: நடப்பாண்டு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நிறைவு பெற்ற நிலையில், மொத்தம் 2 லட்சத்து 53 ஆயிரத்து 954 பேர் விண்ணப்பித்துள்ளனர்.தமிழ்நாட்டில் இன்ஜினியரிங் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம் கடந்த மாதம் 6ம் தொடங்கியது. அதன்படி, அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக் கழக வளாக பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக் கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்காக விண்ணப்பதாரர்கள் www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் தங்களது விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து வந்தனர்.

இந்நிலையில் இதுவரை, மொத்தம் 2 லட்சத்து 53 ஆயிரத்து 954 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 645 பேர் விண்ணக் கட்டணத்தையும், ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 853 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.இவர்களுக்கான தரவரிசை பட்டியல் ஜூலை 10ம் தேதி வெளிடப்படும். சிறப்பு இடஒதுக்கீடு மற்றும் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பை ஏஐசிடிஇ பின்னர் அறிவிக்கும் என கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

 

The post பி.இ விண்ணப்ப பதிவு நிறைவு: 2 லட்சத்து 53 ஆயிரத்து 954 பேர் விண்ணப்பம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...