×

குற்ற சம்பவங்களை தடுக்க தவறிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் : துணை ஆணையர் அதிரடி

சென்னை, ஜூன் 12: கொருக்குப்பேட்டையில் தொடர் கொலை மற்றும் ரவுடிகள் மோதல் மீது முறையான நடவடிக்கை எடுக்காததால் ஆய்வாளரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். கொருக்குப்பேட்டை ஏகாம்பரம் செட்டி தெருவில் உள்ள டாஸ்மாக் கடையில் நேற்றுமுன்தினம் தினேஷ் என்பவரை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது. இது தொடர்பாக கொருக்குப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சக்திவேல் கொருக்குப்பேட்டை காவல் ஆய்வாளர் யுவராஜை தற்காலிக பணியிடம் நீக்கம் செய்து உத்தரவிட்டார். கொருக்குப்பேட்டை பகுதியில் தொடர் கொலை மற்றும் ரவுடிகளுக்கு இடையே மோதல் இருப்பதாக நுண்ணறிவு பிரிவு போலீசார், ஆய்வாளருக்கு தகவல் கொடுத்தனர். இருப்பினும், சரியான முறையில் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு அடிப்படையில் ஆய்வாளர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

The post குற்ற சம்பவங்களை தடுக்க தவறிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் : துணை ஆணையர் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Korukuppet ,Dinesh ,Tasmac ,Ekambaram Chetty Street ,Dinakaran ,
× RELATED கொருக்குப்பேட்டை காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்..!!