×

மின் கசிவால் சவுக்கு தோப்பு எரிந்து சேதம்

திண்டிவனம், ஜூன் 12: விழுப்புரத்தை சேர்ந்தவர் ரசாக் (27). இவருக்கு சொந்தமான நிலம் மயிலம் அருகே உள்ள அரியாங்குப்பம் கிராமத்தில் உள்ளது. இதில் ரசாக் 15 ஏக்கர் பரப்பளவில் சவுக்கு மரங்களை பயிரிட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மயிலம் பகுதியில் பலத்த காற்று வீசியது. இந்த காற்றால் உயர் மின் அழுத்த மின்சார கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி மின் கசிவு ஏற்பட்டு 7 ஏக்கர் சவுக்கு தோப்பு எரிந்தது. இதில் ஏராளமான சவுக்கு மரங்கள் சேதமடைந்தது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த திண்டிவனம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதுகுறித்து ரசாக் கொடுத்த புகாரின்பேரில் மயிலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post மின் கசிவால் சவுக்கு தோப்பு எரிந்து சேதம் appeared first on Dinakaran.

Tags : Tindivanam ,Razak ,Villupuram ,Arianguppam ,Mylam ,
× RELATED விக்கிரவாண்டியில் பாமக போட்டியா? அன்புமணி பேட்டி