×

துணி காயவைத்த போது மின்சாரம் பாய்ந்து தம்பதி பரிதாப பலி

சங்கராபுரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மேல்சிறுவள்ளூரை சேர்ந்தவர் ராமு(38), பொக்லைன் ஆபரேட்டர். இவரது மனைவி சரளா(30). இவர்களுக்கு கீர்த்தனா (13), மேகா (6) என்ற 2 மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் ராமு குளித்துவிட்டு, துண்டை காய வைப்பதற்காக வீட்டில் மீட்டர் பெட்டி அருகில் இருந்த கொடி கம்பியில் போட்டுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக மீட்டர் பெட்டியிலிருந்து கொடி கம்பியில் மின்சாரம் பாய்ந்து ராமு அலறினார். சத்தம் கேட்டு வந்த சரளா அவரை காப்பாற்ற முயன்றபோது அவரையும் மின்சாரம் தாக்கியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து வடபொன்பரப்பி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post துணி காயவைத்த போது மின்சாரம் பாய்ந்து தம்பதி பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Sankarapuram ,Ramu ,Melsiruvallur ,Kallakurichi district ,Sarala ,Keerthana ,Megha ,
× RELATED துணியை காய வைத்த போது மின்சாரம் தாக்கி...