×

தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் 2 நாளில் ரூ.920 உயர்ந்தது: சவரன் ரூ.55 ஆயிரத்தை நெருங்குகிறது

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து 2 நாளில் சவரனுக்கு ரூ.920 உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் சவரன் ரூ.55 ஆயிரத்தை நெருங்கி வருவதால் நகை வாங்குவோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து கடந்த மே 20ம் தேதி ஒரு சவரன் ரூ.55,200க்கு விற்கப்பட்டது. இந்த விலை, தங்கம் வரலாற்றில் அதிகப்பட்ச விலை என்ற உச்சத்தை தொட்டது. அதன் பிறகு தங்கம் விலை குறைவதும், ஏறுவதுமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 3ம் தேதி தங்கம் விலை சவரன் ரூ.352 குறைந்து ஒரு சவரன் ரூ.53,328க்கு விற்பனையானது. தொடர்ந்து 4ம் தேதி தங்கம் சவரனுக்கு ரூ.632 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,960க்கு விற்கப்பட்டது. 5ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.6,725க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.53,800க்கு விற்கப்பட்டது. இந்த விலை குறைவு ஒரு நாள் கூட நீடிக்கவில்லை.

நேற்று முன்தினம் தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்தது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,800க்கும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,400க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு ரூ.600 உயர்ந்தது, நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் நேற்று தங்கம் விலை உயர்வை கண்டது.

நேற்று மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,840க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,720க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் தொடர்ந்து 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.920 உயர்ந்துள்ளது. மீண்டும் தங்கம் விலை சவரன் ரூ.55 ஆயிரத்தை நெருங்கி வருவது நகை வாங்குவோரை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

The post தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் 2 நாளில் ரூ.920 உயர்ந்தது: சவரன் ரூ.55 ஆயிரத்தை நெருங்குகிறது appeared first on Dinakaran.

Tags : Savaran ,CHENNAI ,Sawaran ,sawan ,Dinakaran ,
× RELATED கணவரின் இதய நோய்க்காக மருத்துவமனை...