×

நெல்லை காங். தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் தோட்டத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை: 3 மாவட்ட சிபிசிஐடி போலீசார் முகாம்

நெல்லை: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், கரைச்சுத்துப்புதூரில் அவரது வீட்டிற்கு அருகேயுள்ள தோட்டத்தில் கடந்த மே 4ம் தேதி உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயக்குமார் எழுதியிருந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தொழிலதிபர்கள், உறவினர்கள், நெருக்கமானவர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்பட 32 பேர் மற்றும் குடும்பத்தினர், உறவினர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், ஜெயக்குமாரின் ேதாட்டத்தில் மீண்டும் சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஜெயக்குமாரின் தோட்டம், 7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதனால் இந்த 7 ஏக்கர் தோட்டம் முழுவதும் அங்குலம் அங்குலமாக சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இவர்களுக்கு துணையாக தூத்துக்குடி மற்றும் குமரி சிபிசிஐடி போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் தடயங்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், நெல்லை மாவட்ட வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் வரவழைக்கப்பட்டு உள்ளனர். அவர்களும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் தடயங்களை சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் சிபிசிஐடி அதிகாரிகள், போலீசார், வெடிகுண்டு மற்றும் தடயவியல் நிபுணர்கள் என மொத்தம் 35க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

The post நெல்லை காங். தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் தோட்டத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை: 3 மாவட்ட சிபிசிஐடி போலீசார் முகாம் appeared first on Dinakaran.

Tags : Nellie Kong ,Jayakumar ,district ,CBCID police ,Nellai ,Nellai East District Congress ,President ,Karaichuthupudur ,CBCID ,Nellai Kang ,Dinakaran ,
× RELATED நெல்லை காங். தலைவர் மர்ம மரணம்; உடல்...