×

சிறுமியிடம் அத்துமீறல் வாலிபர் மீது போக்சோ வழக்கு

நெல்லை, ஜூன்6: நெல்லை அருகே சிறுமியிடம் அத்துமீறிய வாலிபர் மீது போலீசார் ேபாக்சோ வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்தவர் ராமன் மகன் முத்து(23). கூலித்தொழிலாளி. இவர் 16 வயதுள்ள ஒரு சிறுமியை காதலித்து வந்துள்ளார். பின்னர் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அந்த சிறுமியின் தாயாருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் வள்ளியூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து வாலிபர் முத்து மீது போக்சோ வழக்கு பதிவு செய்து எஸ்ஐ முகிலா விசாரித்து வருகிறார்.

The post சிறுமியிடம் அத்துமீறல் வாலிபர் மீது போக்சோ வழக்கு appeared first on Dinakaran.

Tags : Nellai ,Raman ,Muthu ,Valliyur ,
× RELATED நெல்லையில் ஆவுடையப்பன் தலைமையில் மாணவரணி நேர்காணல் ஆலோசனை கூட்டம்