×

சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் பணி

குத்தாலம், ஜூன்6:குத்தாலம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுடன் இணைந்து 500 மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு குத்தாலம் பொதுமக்களும் மற்றும் பேரூராட்சி நிர்வாகமும் இணைந்து குத்தாலம் பகுதிகளில் பல்வேறு இடங்களில் 500 மரக்கன்றுகளை தொடர்ந்து மூன்று நாட்களாக நடும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் குத்தாலம் பேரூராட்சி செயலாளர் ரஞ்சித், துப்புரவு ஆய்வாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பேரூராட்சியின் அனைத்து நிலை அலுவலர்கள், ஊழியர்கள், தூய்மை காவலர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

The post சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் பணி appeared first on Dinakaran.

Tags : Environment Day ,Kutthalam ,World Environment Day ,Mayiladuthurai District ,Kuthalam ,Dinakaran ,
× RELATED உடையார்பாளையம் அரசு மகளிர் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம்