×

விஷம் குடித்து பெண் பலி

விருதுநகர், ஜூன் 6: விருதுநகர் அருகே கூரைக்குண்டு பகுதியை சேர்ந்தவர் செந்தாமரைச்செல்வி(35). இவர் அதே பகுதியை சேர்ந்த முருகேசபாண்டியன் என்பவரை, 17 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் செந்தாமரைச்செல்வியை அவரது கணவர் வன்கொடுமை செய்ததால் ஜூன் 1ல் எலிமருந்து குடித்துள்ளார்.

உடல்நிலை மோசமானதை தொடர்ந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயர் சிகிச்சைக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தாமரைச்செல்வி நேற்று முன்தினம் உயிரிழந்தார். விருதுநகர் பஜார் போலீசில் செந்தாமரைச்செல்வியின் தந்தை கண்ணன் அளித்த புகாரின் பேரில், போலீசார் இந்த தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post விஷம் குடித்து பெண் பலி appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Sentamaraichelvi ,Thakurkundu ,Murugesapandian ,
× RELATED பொருளாதாரத்தில்...