×

கனிமொழி முதல் ஜோதிமணி வரை.. தமிழ்நாட்டிலிருந்து நாடாளுமன்றம் செல்லும் 5 பெண் எம்.பி.க்கள்!!

சென்னை : தமிழகத்தில் இருந்து திமுக கூட்டணி சார்பாக 5 பெண் எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு செல்கின்றனர். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்றத்திற்கு செல்லும் 5 பெண் எம்பிக்களை காணலாம்.

*மக்களவை தேர்தலில் திமுக சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி கருணாநிதி மூன்று லட்சத்து 92 ஆயிரத்து 738 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் களம் இறக்கப்பட்ட சிவசாமி வேலுமணி தோல்வியடைந்துள்ளார்.

*கரூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களம் இறக்கப்பட்ட ஜோதிமணி ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 8 16 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் . இவரை எதிர்த்து அதிமுக தரப்பில் தங்கவேல் களம் இறக்கப்பட்ட நிலையில் அவர் தோல்வியை சந்தித்துள்ளார்.

*தென்காசி தொகுதியில் ராணி ஸ்ரீகுமார் ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 199 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவர் அதிமுக சார்பில் களமிறக்கப்பட்ட டாக்டர் k கிருஷ்ணசாமியை தோல்வியடைய செய்துள்ளார்.

*மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சுதா களம் இறக்கப்பட்ட நிலையில் இவர் 2 லட்சத்து 71 ஆயிரத்து 183 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் . இவர் அதிமுகவின் பாபுவை தோல்வியடைய செய்துள்ளார் .

*தென் சென்னை தொகுதியில் மீண்டும் களம் இறக்கப்பட்ட திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 2 லட்சத்து 25 ஆயிரத்து 945 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவை சேர்ந்த தமிழிசை சௌந்தர்ராஜன் வென்றுள்ளார்.

The post கனிமொழி முதல் ஜோதிமணி வரை.. தமிழ்நாட்டிலிருந்து நாடாளுமன்றம் செல்லும் 5 பெண் எம்.பி.க்கள்!! appeared first on Dinakaran.

Tags : Kanimozhi ,Jyotimani ,Tamil Nadu ,Parliament ,Chennai ,DMK alliance ,Lok Sabha elections ,DMK ,Puducherry ,
× RELATED தமிழ்நாட்டில் தாமரை மலராது என்பது நிரூபணம்: கனிமொழி எம்.பி