சென்னை: கட்சி தொடங்கி 25 ஆண்டுகளுக்குப் பிறகு மாநில கட்சிக்கான அங்கீகாரம் பெற்றுள்ளோம் என விசிக தலைவர் திருமாவளவன் பேட்டியளித்துள்ளார். 25 ஆண்டுகால உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் இது. தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்கு மிகப்பெரிய வெற்றியாக அமைந்திருக்கிறது. ஆட்சி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கவுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.
The post கட்சி தொடங்கி 25 ஆண்டுகளுக்குப் பிறகு மாநில கட்சிக்கான அங்கீகாரம் பெற்றுள்ளோம்: திருமாவளவன் appeared first on Dinakaran.