×

ஏரியில் மூழ்கி கூலி தொழிலாளி பலி

பெரும்புதூர், ஜூன் 5: காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர் ஒன்றியம், மண்ணூர் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி இளங்கோவன் (38). இவருக்கு, கோமலா என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியே சென்ற இளங்கோவன், இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால், அவரது மனைவி கோமலா அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீட்டில் தேடியும் கிடைக்கவில்லை. ந்நிலையில், நேற்று காலை மண்ணூர் ஏரியில் ஆண் சடலம் மிதப்பதாக, அப்பகுதி மக்கள் பெரும்புதூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பெரும்புதூர் போலீசார் மற்றும் பெரும்புதூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், ஏரியில் மிதந்த சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். அதில், ஏரில் மூழ்கி இறந்தது இளங்கோவன் என்பது தெரியவந்தது. பின்னர், போலீசார் சடலத்தை பிரத பரிசோதனைக்காக பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், நேற்று முன்தினம் மண்ணூர் ஏரியின் அருகே இளங்கோவன் மது குடித்துள்ளார். பின்னர், ஏரியில் குளிப்பதற்காக சென்றபோது, மதுபோதையில் இருந்ததால் இளங்கோவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஏரியில் மூழ்கி கூலி தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Kanchipuram district ,Mannoor ,Ilangovan ,Gomala ,Elangovan ,Dinakaran ,
× RELATED ஏரியில் மூழ்கி கூலி தொழிலாளி பலி