×

சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து

 

மேலூர், ஜூன் 4: மேலூர் நான்குவழிச்சாலையில் சென்ற சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் ஒருவர் பலியானார். நாகர்கோவிலில் இருந்து வேளாங்கண்ணியை நோக்கி மேலூர் நான்குவழிச்சாலையில், நேற்று முன் தினம் சுற்றுலா வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. வேனில் 20 பயணிகள் இருந்தனர். மேலூர் அருகே தும்பைப்பட்டி பகுதியில் வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு மேலூர் தீயணைப்பு துறை வீரர்கள் சென்று, வேனின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இதில் நாகர்கோவிலை சேர்ந்த ஜஸ்டின்(43) சம்பவ இடத்திலேயே பலியானார். 4 பேர் படுகாயத்துடன் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் 15 பேர் சிறு காயங்களுடன் தப்பினர். இந்த விபத்து குறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

The post சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.

Tags : Melur ,highway ,Nagercoil ,Velankanni ,Dinakaran ,
× RELATED மேலூர் அரசு பள்ளிக்கு கல்வி உபகரணங்கள்