×

பலத்த மழை, சூறாவளி காற்றுக்கு 10 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்தன

 

அவிநாசி, ஜூன் 4: அவிநாசி வட்டார பகுதியில் கடந்த 2 நாட்களாக பலத்த காற்றுடன் பெய்த கனமழை, பலத்த சூறாவளி காற்றுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன. இதற்கு உரிய இழப்பீட்டு தொகையை கணக்கிட்டு விரைவில் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கி உள்ளதால், கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனால், விவசாயிகள், பொதுமக்கள் உள்பட அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக அவிநாசி வட்டாரத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதில் அவிநாசி இராயம்பாளையம், கருமாபாளையம், சின்னேரிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக வாழைக்காய் குலை தள்ளிய நிலையில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் மழைக்காற்றினால் முறிந்து சாய்ந்து சேதமடைந்தன.

இதனால் சுமார் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டு, பெரும் பொருளாதார பாதிப்புக்கு உள்ளானதாக வாழை விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து வருவாய்த்துறையினர், தோட்டக்கலைத்துறையினர் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குறித்து கணக்கிடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். உடனடியாக உரிய இழப்பீட்டு தொகையை கணக்கிட்டு, விரைவில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பலத்த மழை, சூறாவளி காற்றுக்கு 10 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்தன appeared first on Dinakaran.

Tags : Avinasi ,Dinakaran ,
× RELATED நீர்வளத்துறை அலுவலகத்தில் காலிப்பணியிடம் விண்ணப்பிக்க அழைப்பு