×

பள்ளி அருகே போதை பாக்கு விற்பனை கண்டறிய உத்தரவு

 

கோவை, ஜூன் 4: கோவை நகர், புறநகரில் புகையிலை பொருட்கள் விற்க தடை செய்யப்பட்டுள்ளது. நகரில் குறிப்பிட்ட சில வணிக பகுதிகளில் குடோன்களில் மூட்டை மூட்டையாக புகையிலை பொருட்களை பதுக்கி வைப்பதும், அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் கடைகளுக்கு சப்ளை செய்வதும் நடக்கிறது.

தினமும் நகர், புறநகரில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் விற்பனையாகி வருகிறது. ஏரியாவிற்கு ஏற்ப சிலர் குடோன்களை அமைத்து அங்கேயிருந்து கடைகளுக்கு விற்பனை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. புகையிலை பொருட்களை இரு மடங்கு விலைக்கு விற்றாலும் போட்டி போட்டு வாங்கி செல்கிறார்கள். ஏரியா வாரியாக போதை பாக்கு விற்கும் கடைகள் விவரங்கள், வியாபாரிகள் குறித்த தகவல்கள் போலீஸ் ஸ்டேஷன்களில் சேகரிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரி வளாகங்கள் அருகே சிலர் போதை பாக்குகள் விற்பதாக தெரிகிறது. பள்ளிகள் வரும் 10ம் தேதி திறக்கப்படவுள்ள நிலையில் போதை பாக்கு, போதை மாத்திரை விற்பனைகளை முற்றிலும் தடுக்கவேண்டும். பள்ளி வளாகம் அருகே போதை பொருட்கள் வழங்குவதை தடுக்க தீவிரம் காட்ட வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

The post பள்ளி அருகே போதை பாக்கு விற்பனை கண்டறிய உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,
× RELATED 1.5 கிராம் உயர்ரக போதை பொருள் பறிமுதல்