×

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை: ஜனாதிபதிக்கு ஐகோர்ட் முன்னாள் நீதிபதிகள் கடிதம்

டெல்லி: மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்ய வலியுறுத்தி ஜனாதிபதிக்கு சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் அருணா ஜெகதீசன், ஹரிபரந்தாமன், அக்பர் அலி, சி.டி.செல்வம் உள்ளிட்ட 7 நீதிபதிகள் கூட்டாக கடிதம் அனுப்பியுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலையொட்டி கடந்த சில வாரங்களாக நடைபெறும் நிகழ்வுகள் அவநம்பிக்கை தருவதாக உள்ளது.
குழப்பம் நிறைந்த இந்த சூழல் வன்முறையில் முடியும் ஆபத்து இருப்பதாகவும் முன்னாள் நீதிபதிகள் கவலை தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளனர்.

 

The post மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை: ஜனாதிபதிக்கு ஐகோர்ட் முன்னாள் நீதிபதிகள் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Icourt ,Delhi ,Chennai High Court ,Aruna Jegadishan ,Haribarandaman ,Akbar Ali ,C. D. Seven ,Wealth ,Lok Sabha ,President ,Dinakaran ,
× RELATED நாய்களின் உளவியல் குறித்து விரிவான ஆய்வு நடத்த வேண்டும்: ஐகோர்ட் ஆணை