×

பாஜவுக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்ட தேர்தல் ஆணையம்: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

மன்னார்குடி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் மன்னார்குடியில் அளித்த பேட்டி: 1948ல் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர் ஐநா சபையின் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிட்டு, உலகத் தலைவர்கள் ஒன்று கூடி இரங்கல் தீர்மானம் நிறைவேற்றினார்கள். இத்தகைய உலகம் அறிந்த தலைவர் என்பதாலேயே அட்டன் பிரபு காந்தியை பற்றி திரைப்படம் எடுத்தார். இத்தகைய சூழலில், பிரதமர் மோடி ஆர்எஸ்எஸ் மனப்பான்மையோடு மகாத்மா காந்தியை சிறுமைப்படுத்தி திரைப்படம் வெளிவந்ததற்கு பிறகு தான் மகாத்மா காந்தி பற்றி உலகம் அறிந்தது என கூறியுள்ளார்.

வடமாநிலங்களிலும் ஒடிசா தேர்தல் பிரசாரத்தின் போதும் தோல்வி பயம். அதனால் ஏற்பட்ட பதற்றம், அதன் காரணமாக காந்தியைப் பற்றி குறைத்து மதிப்பிட்டு பேசியது. இதற்கெல்லாம் பரிகாரம் தேடுவதற்காகவே பிரதமர் மோடி தமிழகத்துக்கு வந்து தியானம் மேற்கொண்டார். தேர்தல் ஆணையம் பாஜவுக்கு ஆதரவாக தொடர்ச்சியாக செயல்பட்டு வந்தது.

இருந்த போதிலும் இந்த தேர்தலை பொருத்தவரை இந்தியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். வாக்கு எண்ணிக்கையின் போது எந்த ஒரு தவறும் நடக்கக் கூடாது என்பதில் இந்தியா கூட்டணி முழு கவனமாக உள்ளது. அதற்காக வாக்கு எண்ணிக்கை முடியும் வரை அதற்கான முகவர்கள் அங்கிருந்து கலைந்து சென்று விடக்கூடாது என அந்தந்த மாநிலத்தில் இந்தியா கூட்டணிக்கு தலைமை வைக்கின்ற கட்சிகள் மூலம் அனைத்து கட்சி முகவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பாஜவுக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்ட தேர்தல் ஆணையம்: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Election Commission ,BJP ,G. Ramakrishnan ,Mannargudi ,Political Leadership Committee of the Communist Party of India ,Mahatma Gandhi ,UN Council ,Dinakaran ,
× RELATED மும்பை வடமேற்கு தொகுதியில் EVM-ல்...