×

ஆலங்குளம் அருகே பெண் மாயம்

ஆலங்குளம்,ஜூன் 2: ஆலங்குளம் அருகேயுள்ள குறிப்பன்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் குருநாதன் மகன் முருகேசன் (31). கூலித் தொழிலாளி. இவரது மனைவி உமாமகேஸ்வரி (30). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. 9 வயதில் ஆண் குழந்தை, 8 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 23ம் தேதி உமா மகேஸ்வரி வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால், அதன்பிறகு அவர் திரும்பி வரவில்லை என கூறப்படுகிறது. அவரது கணவர் முருகேசன் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர் ஆலங்குளம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post ஆலங்குளம் அருகே பெண் மாயம் appeared first on Dinakaran.

Tags : Alankulam ,Gurunathan ,Murugesan ,Mechankulam North Street ,Umamakeswari ,
× RELATED பவானி நகராட்சியில் குடிநீர் விரிவாக்க திட்ட பணி ஆய்வு