×

செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு மோடி செய்தது `அரசியல் தியானம்’

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று அளித்த பேட்டி: தபால் வாக்குகளை முதலிலேயே எண்ண வேண்டும். தேர்தல் ஆணையம் தேர்தல் முடிவுகள் வெளியிடும்போது கும்பகர்ணனை போல தூங்கக் கூடாது. முந்தைய காலத்தில் மக்கள் நலனுக்காகவும், நாட்டின் நலனுக்காகவும் மகான்கள் தியானம் செய்தனர்.

ஆனால் மோடி, 16 கேமராக்களை சுற்றிலும் வைத்துக் கொண்டு தியானம் செய்கிறார். இதற்கு பெயர் தேர்தல் அரசியல் தியானம். நடந்து முடிந்த தேர்தலில், யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு இந்தியா கூட்டணி வெற்றி பெற இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

 

The post செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு மோடி செய்தது `அரசியல் தியானம்’ appeared first on Dinakaran.

Tags : Modi ,Chennai ,Tamil ,Nadu ,Congress ,Selvaperunthakai ,Kumbakarna ,Election Commission ,
× RELATED வரும் 20ம் தேதி சென்னை வரும் பிரதமர்...