×

ஜூன் 4ம் தேதி இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

சென்னை: ஜூன் 4ம் தேதி இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு: பாஜவின் 10 ஆண்டு கால பாசிச ஆட்சியை வீழ்த்தி, இந்தியாவை காக்க உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி, மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்து, வெற்றியின் முகட்டில் நிற்கிறது. தன்னை எதிர்க்க யாருமே இல்லை என்ற மமதையில் இருந்த பாஜவுக்கு எதிராக, ஜனநாயக சக்திகளின் மாபெரும் அணி திரளாக அது அமைந்திருக்கிறது. இந்திய மக்கள் அனைவருக்கும் நம்பிக்கை தரும் அணியாக, தேர்தல் களத்தில் அமைந்திருக்கிறது.

தங்களது இடைவிடாத பரப்புரையின் மூலம் இந்தியா கூட்டணியின் முன்னணி தலைவர்கள், பாஜ உருவாக்கிய போலி பிம்பத்தை மக்கள் மன்றத்தில் உடைத்தெறிந்து இருக்கிறோம். இந்தியா கூட்டணியின் வெற்றி செய்திக்கு இன்னும் 3 நாட்களே உள்ளன. வாக்கு எண்ணிக்கையின்போது அதிகமான விழிப்புணர்வுடன் இந்தியா கூட்டணி செயல்வீரர்கள் இருக்க வேண்டும். ஜூன் 4ம் தேதி இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும். இதுதொடர்பாக இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் திமுக சார்பில் பொருளாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு பங்கேற்கிறார். பாசிச பாஜ வீழட்டும், இந்தியா வெல்லட்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

The post ஜூன் 4ம் தேதி இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : India ,Chief Minister ,MK Stalin ,Chennai ,M. K. Stalin ,Twitter ,BJP ,
× RELATED அதிமுக உறுப்பினர்களை அவையில்...