×

கொலையான வங்கதேச எம்பியின் ‘சதை’ செப்டிக் டேங்கில் மீட்பு: கொல்கத்தா போலீஸ் விசாரணை

கொல்கத்தா: கொல்கத்தாவில் கொலை செய்யப்பட்ட வங்கதேச எம்பியின் சதை பகுதிகள், அடுக்குமாடி குடியிருப்பின் செப்டிக் டேங்கில் மீட்கப்பட்டது. வங்கதேசத்தின் ஆளும் கட்சியான அவாமி லீக்கை சேர்ந்த எம்பி அன்வருல் அசிம் அனார் என்பவர், மருத்துவ சிகிச்சைக்காக கடந்த 12ம் தேதி மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவுக்கு வந்தார். அதற்கு அடுத்தநாள் முதல் அவரை காணவில்லை. தொடர் விசாரணையில், அவர் கொல்கத்தாவில் உள்ள ஒரு வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, அவரது உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கால்வாய்களில் வீசப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக கொல்கத்தா போலீசாரும், வங்கதேசத்தை சேர்ந்த புலனாய்வு அதிகாரிகளும் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து கொல்கத்தா போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘வங்கதேச எம்பி அன்வருல் அசிம் அனாரை, அவரது அமெரிக்க குடியுரிமை பெற்ற வங்கதேச தொழிலதிபர் முகமது அக்தர் உஸ்மான் மற்றும் அவரது கூட்டாளிகள் கொலை செய்துள்ளனர். அன்வருல் அசிமின் உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டதால், பல இடங்களில் உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது வடக்கு 24 பர்கானாஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் செப்டிக் டேங்கில் அன்வருல் அசிமின் தோலுரிக்கப்பட்டு வெட்டப்பட்ட உடல் பாகங்கள் கடைத்துள்ளன. அவற்றை கைப்பற்றி தடயவியல் பகுப்பாய்வு மற்றும் டிஎன்ஏ சோதனைக்கு அனுப்பி உள்ளோம். இவ்வழக்கில் இதுவரை பெண் உட்பட 3 பேரை கைது செய்துள்ளோம்’ என்றனர்.

The post கொலையான வங்கதேச எம்பியின் ‘சதை’ செப்டிக் டேங்கில் மீட்பு: கொல்கத்தா போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Kolkata ,Anwarul Azim Anar ,Bangladesh ,Awami League ,West Bengal ,
× RELATED வங்கதேச எம்பி கொலை மே. வங்கத்தில் கால்வாயில் இருந்து மனித எலும்பு மீட்பு