×

குழந்தையுடன் தாய் மாயம்

 

தர்மபுரி, மே 29:கடத்தூர் தேக்கல்நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (35), பொக்லைன் ஆப்ரேட்டர். இவர் கடந்த 2010ம் ஆண்டு ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த பிரியா (30) என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு வினோதினி (9) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரியா தனது மகள் வினோதினியுடன் ராமநாதபுரத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு செல்வதாக கூறி புறப்பட்டு சென்றார்.

ஆனால் பெற்றோர் வீட்டுக்கு அவர்கள் செல்லவில்லை. இதையறிந்த பெரியசாமி பல்வேறு இடங்களில் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. இதுகுறித்து கடத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான தாய், மகளை தேடிவருகின்றனர்.

The post குழந்தையுடன் தாய் மாயம் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Periyasamy ,Kadathur Thekalnayakanpatti ,Priya ,Ramanathapuram ,Vinothini ,Mayam ,
× RELATED குட்கா விற்ற கடைக்கு சீல்