×

1 டன் குட்கா பறிமுதல் கார் எண்ணை வைத்து போலீஸ் விசாரணை

 

திருப்பூர், மே 26: திருப்பூர் விபத்தில் சிக்கிய கார்களில் இருந்து 1 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடியவர்களை கார் எண்ணை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர். திருப்பூர் பெருமாநல்லூர் அருகே வளசப்பாளையத்தில் நேற்று முன்தினம் கர்நாடகா பதிவு கொண்ட ஒரு காரின் டயர் வெடித்து டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால், அந்த காருக்கு பின்னாடி வந்து கொண்டிருந்த அரசு பஸ் அந்த காரின் மீது மோதியது.

மேலும், பஸ்சுக்கு பின்னால் வந்த கொண்டிருந்த மற்றொரு டெல்லி பதிவு எண் கொண்ட காரும் பஸ் மீது மோதியது. இதற்கிடையே கார்களை ஓட்டி வந்த டிரைவர் உள்பட கார்களில் வந்தவர்கள் காரை நிறுத்திவிட்டு தப்பியோடி விட்டனர். தகவல் அறிந்து வந்த பெருமாநல்லூர் போலீசார், காரை சோதனை செய்தனர்.

அப்போது 2 காருக்குள்ளும் 158 மூட்டைகளில் 1,024 குட்கா இருந்தது. குட்கா பொருட்கள் யாருக்கு கொண்டு செல்லப்பட்டது? எங்கிருந்து கொண்டுவரப்பட்டது? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. இதுபோல் எந்தெந்த சோதனை சாவடி வழியாக கார்கள் வந்துள்ளது என்பது குறித்து விசாரணை நடந்து வருகின்றது. கார்களின் எண்களை கொண்டும் விசாரணை நடந்தது வருகிறது.

The post 1 டன் குட்கா பறிமுதல் கார் எண்ணை வைத்து போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Gutka ,Valashappalayam ,Perumanallur ,Dinakaran ,
× RELATED திருப்பூரில் ரோட்டோரத்தில் சிம்கார்டு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும்