×

தனியார் ஊழியரிடம் ரூ.11.19 லட்சம் மோசடி

 

கிருஷ்ணகிரி, மே 25: கிருஷ்ணகிரி அடுத்த பெத்ததாளப்பள்ளி இந்திரா நகரைச் சேர்ந்தவர் ராஜூ(47). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது டெலிகிராம் பக்கத்திற்கு, கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி விளம்பரம் ஒன்று வந்திருந்தது. அதில் முதலீடு செய்தால் அதிகளவில் லாபம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை நம்பிய ராஜூ, அதில் கொடுக்கப்பட்டிருந்த செல்போன் நம்பர் மற்றும் லிங்கை கிளிக் செய்து, அதுபற்றிய தகவல்களை தெரிந்து கொண்டார்.

பின்னர் அவர்கள் கொடுத்த பல்வேறு வங்கி கணக்குகளுக்கு, சிறிது சிறிதாக ரூ.11 லட்சத்து 19 ஆயிரத்தை அனுப்பி வைத்துள்ளார். ஆனால், அவர்கள் கூறியபடி எந்தவித லாபமும் கிடைக்கவில்லை. அவர்களை தொடர்பு கொள்ள முயன்ற போது, முடியாததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார். இதுபற்றி அவர் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தனியார் ஊழியரிடம் ரூ.11.19 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Raju ,Indira Nagar, Pettalapalli ,Dinakaran ,
× RELATED மாவட்டத்தில் நடப்பாண்டு 2.19 லட்சம் மாணவர்களுக்கு இலவச பாடநூல் விநியோகம்