×

தேசிய மக்கள் நீதிமன்றம் வரும் 8ம் தேதி நடக்கிறது

 

தர்மபுரி, மே 24: தர்மபுரி முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் தலைவருமான மணிமொழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்ட அளவில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக, தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படியும், சென்னை உயர்நீதிமன்றம் வழிகாட்டுதலின் படியும், வரும் ஜூன் 8ம் தேதி(சனிக்கிழமை) தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது.

இதையொட்டி, வரும் ஜூன் 3ம் தேதி முதல் ஜூன் 7ம் தேதி வரை(அனைத்து வேலை நாட்களிலும்) சிறப்பு மக்கள் நீதிமன்ற அமர்வு, அந்தந்த மாவட்ட நீதிமன்ற வளாகங்களிலேயே மதியம் 2 மணிக்கு மேல் நடக்கிறது. தேசிய மக்கள் நீதிமன்ற அமர்வை தொடர்ந்து, தர்மபுரி மாவட்டத்தில் வரும் ஜூன் 8ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள, சமரசம் செய்து கொள்ளக் கூடிய மோட்டார் வாகன விபத்து, காசோலை மோசடி வழக்கு, வங்கி வாகன விபத்து வழக்கு, வாராக்கடன் வழக்கு, தொழிலாளர் நல வழக்கு மற்றும் சமரச குற்ற வழக்குகளுக்கு, சமரச முறையில் அன்றைய தினமே தீர்வு காணப்படவுள்ளது.

பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, நீதிமன்றங்களில் ஆஜராகி நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள, சமரசம் செய்து கொள்ளக் கூடிய பிரிவு வழக்குகளில் சமரசம் செய்து கொண்டு, வழக்கினை முடித்துக் கொள்ளலாம். லோக் அதாலத்தில் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டால், நீதிமன்ற கட்டணம் வழக்குதாரர்களுக்கு திருப்பித் தரப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

The post தேசிய மக்கள் நீதிமன்றம் வரும் 8ம் தேதி நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : National People's Court ,Dharmapuri ,Principal ,District Judge ,District Legal Affairs Commission ,Manimozhi ,National Legal Affairs Commission ,
× RELATED தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,049...