×

ரூ.25 லட்சம் மோசடியில் கைதான எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்

திருப்பூர்: பொள்ளாச்சி, திம்மன்குத்து, தப்பட்டைகிழவன் புதூர் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் (22). இவருக்கு எஸ்ஐ வேலை வாங்கி தருவதாக ஜெயராஜ் (42), திருப்பூர் மாநகர், நல்லூர் காவல் நிலைய சிறப்பு எஸ்ஐ முரளிதரன் (52) மற்றும் கிருஷ்ணராஜ் ஆகியோர் ரூ.25 லட்சம் பெற்று கொண்டு வேலை வாங்கி தராமல் மோசடி செய்தனர். இது குறித்து பிரசாந்த் புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து ஜெயராஜ், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் முரளிதரன் ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில் முரளிதரனை சஸ்பெண்ட் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.

The post ரூ.25 லட்சம் மோசடியில் கைதான எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : SSI ,Tirupur ,Prashant ,Pollachi ,Thimmankuttu ,Tapattaigivaan Budur ,Jayaraj ,Mayor ,Special SI ,Muralitharan ,Nallur ,Police Station ,Krishnaraj ,Dinakaran ,
× RELATED சாத்தான்குளம் ஏட்டு எஸ்எஸ்ஐயாக பதவி உயர்வு