×

விழுப்புரத்தில் பரபரப்பு வாழைப்பழ வியாபாரிக்கு கத்தரிக்கோலால் சரமாரி குத்து

வடமாநிலத்தவருக்கு போலீஸ் வலை

விழுப்புரம் : விழுப்புரத்தில் வாழைப்பழ வியாபாரியை கத்தரிக்கோலால் சரமாரியாக குத்தி விட்டு தப்பியோடிய வட மாநிலத்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மருதூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர், உழவர்சந்தை அருகே இரவு நேரங்களில் வாழைப்பழங்களை தள்ளுவண்டியில் வைத்து விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வடமாநிலத்தை சேர்ந்த 3 பேர் வாழைப்பழம் வாங்குவதற்கு வந்துள்ளனர்.

அப்போது வாழைப்பழம் வாங்கிவிட்டு காசு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதில் சரவணனுக்கும் வடமாநிலத்தவருக்கும் தகராறு ஏற்படவே குடிபோதையில் இருந்த வடமாநிலத்தவரில் ஒருவர் தான் வைத்திருந்த கத்தரிக்கோலால் வாழைப்பழ வியாபாரி சரவணனை சரமாரியாக குத்தியதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த நகர காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அதற்குள் 2 பேர் தப்பியோடிய நிலையில் குடிபோதையில் சிக்கிய ஒருவரை பிடித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post விழுப்புரத்தில் பரபரப்பு வாழைப்பழ வியாபாரிக்கு கத்தரிக்கோலால் சரமாரி குத்து appeared first on Dinakaran.

Tags : Villupuram ,North State ,Saravanan ,Marudhur ,
× RELATED விழுப்புரம் மொரட்டாண்டி...