புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது. அன்னவாசல் 6 செ.மீ., குடுமியான்மலை 5.5 செ.மீ., இலுப்பூரில் 5 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. தொடர்ந்து 3-வது நாளாக விராலிமலையில் பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. விராலிமலை பேருந்து நிலையத்தில் மழை நீர் தேங்கியதால், பேருந்துகள் மற்றும் பயணிகள் உள்ளே செல்வதில் சிரமம் ஏற்பட்டது.
The post விராலிமலையில் 10 செ.மீ. மழை பதிவு appeared first on Dinakaran.