×

நீலகிரி ஓட்டல்களில் கெட்டுப்போன, காலாவதியான உணவு பொருட்களை விற்றால் உரிமம் ரத்து: உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை

 

ஊட்டி, மே 18: நீலகிரி மாவட்டத்தில் ஓட்டல்கள் மற்றும் கடைகளில் கெட்டுப்போன மற்றும் காலாவதியான உணவு பொருட்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் உணவு பாதுகாப்பு உரிமம் ரத்து செய்யப்படும் என உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது. ஊட்டியில் உள்ள பல ஓட்டல்கள், உணவகங்களில் தரமற்ற உணவுகள், குடிநீர் வழங்கப்படுவதாகவும், சுகாதாரமற்ற முறையில் பாிமறிக்க படுவதாகவும் புகார்கள் எழுந்த நிலையில் ஆய்வுகள் நடத்தி உாிய நடவடிக்கை எடுக்குமாறு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் அருணா உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து, உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சுரேஷ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகுமார், சிவராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஊட்டி கமர்சியல் சாலை மற்றும் சேரிங்கிராஸில் உள்ள உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள உணவகங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 10 கிலோ பழைய கெட்டுப்போன கோழி இறைச்சி, ஒரு கிலோ பழைய மோமோஸ் மற்றும் காலாவதியான 4 பாக்கெட் காளான் போன்ற உணவு பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. சுகாதாரமற்ற நிலையில் இருந்த 6 உணவகங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு தலா ரூ. 1000 அபராதம் விதிக்கப்பட்டது.

The post நீலகிரி ஓட்டல்களில் கெட்டுப்போன, காலாவதியான உணவு பொருட்களை விற்றால் உரிமம் ரத்து: உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,Food Safety Department ,Ooty ,Ooty… ,Nilgiri ,Dinakaran ,
× RELATED தாய்ப்பால் விற்ற கடைக்கு சீல் வைப்பு