சிவகாசி, மே 16: சிவகாசி அருகே பள்ளபட்டி ரோடு முத்துராமலிங்கபுரம் காலனியில் சிவகாசி கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் எஸ்ஐ ஆனந்தகுமார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சந்தேகமான முறையில் நின்று கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் சாமுவேல்(21), மனோகரன் மகன் குமார்(19) ஆகிய 2 வாலிபர்களையும் பிடித்து சோதனையிட்டனர். அவர்களிடம் 1950 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து 2 வாலிபர்களையும் கைது செய்தனர்.
The post 2 கிலோ கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.