×

பிரசவத்தின்போது குழந்தை இறப்பு

புதுச்சேரி: கர்ப்பிணிக்கு பிரசவத்தின்போது குழந்தை இறந்ததால் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். புதுச்சேரி அரியாங்குப்பம், மணவெளி, ஓடைவெளியைச் சேர்ந்தவர் கலையரசன் (31). ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜெயசுதா (28). நிறைமாத கர்ப்பிணியான இவரை கடந்த 13ம்தேதி பிரசவ வலி ஏற்பட்டதும், கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். நேற்று அதிகாலை 1.45 மணியளவில் ஜெயசுதாவுக்கு பெண் குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது. இதுகுறித்து ஜெயசுதாவின் உறவினரிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கதறி அழுததோடு, தவறான சிகிச்சையால் குழந்தை இறந்துவிட்டதாக கூறி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனை கண்காணிப்பாளர் துரைராஜனை சந்தித்து குழந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் புகார் அளித்தனர். தகவலறிந்து வந்த கோரிமேடு போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குழந்தையின் உடலை ஒப்படைத்தனர்.

The post பிரசவத்தின்போது குழந்தை இறப்பு appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Kalaiyarasan ,Arianguppam ,Manaveli ,Odaiveli ,Jayasuda ,
× RELATED மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்...