×

திருச்செங்கோட்டில் கோடை மழை

திருச்செங்கோடு, மே 15: திருச்செங்கோடு நகராட்சி பகுதிகளான கொல்லப்பட்டி, கூட்டப்பள்ளி, நெசவாளர் காலனி, கைலாசம்பாளையம் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை திடீர் மழை பெய்தது. சுமார் 45 நிமிடங்கள் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் கோடை வெப்பம் தணிந்து, குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மழையின் காரணமாக, சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

The post திருச்செங்கோட்டில் கோடை மழை appeared first on Dinakaran.

Tags : Tiruchengode ,Kilithi ,Kootapalli ,Weaver's Colony ,Kailasampalayam ,
× RELATED கூட்டப்பள்ளி ஏரியை தூர்வார நடவடிக்கை