×

வெளி மாநில மது விற்ற 42 பேர் மீது வழக்குபதிவு

கிருஷ்ணகிரி, மே 14: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எங்கும் அரசு மதுபானங்களை கூடுதல் விலைக்கு கள்ள மார்க்கெட்டில் விற்கிறார்களா என்றும், பிற மாநில மதுபானங்களை விற்பனை செய்கிறார்களா? என போலீசார் கண்காணித்து வருகிறார்கள். அந்த வகையில் நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் அரசு மதுபானங்களை சந்து கடைகளில் கூடுதல் விலைக்கும், பிற மாநில மதுபானங்களை விற்பனை செய்ததாக 42 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டன. மேலும், அவர்களிடம் இருந்து ₹52 ஆயிரத்து 440 மதிப்புள்ள, 437 பாட்டில்கள் மற்றும் 2 லிட்டர் பானங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

The post வெளி மாநில மது விற்ற 42 பேர் மீது வழக்குபதிவு appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Krishnagiri district ,Dinakaran ,
× RELATED முன்னாள் ராணுவ வீரர் உயிரிழப்பிற்கு...