- பிரதமர் மோடி
- கர்கே
- ஹசாரிபாக்
- காங்கிரஸ் தேசிய ஜன
- மல்லிகார்ஜுனா கார்கே
- மோடி
- ஹசரிபாக், ஜார்கண்ட்
- கார்கே
ஹசாரிபாக்: ‘மக்களை தேர்தலில் மோடி ஜெயித்து விட்டால், அடுத்து நாட்டில் தேர்தலே இருக்காது’ என காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறி உள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் நேற்று பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது: அரசியலமைப்பும் ஜனநாயகமும் ஆபத்தில் உள்ளன. மக்கள் ஆபத்தில் இருக்கிறார்கள். உங்களுக்கு அடிப்படை உரிமைகள் இல்லையென்றால், அடிமைகளாகத்தான் இருப்பீர்கள். மோடி மட்டும் இந்த முறை வெற்றி பெற்று விட்டால், எதிர்காலத்தில் எந்தத் தேர்தலும் நடக்காது. ஹேமந்த் சோரனை கைது செய்தவர்கள், ஏன் அதானியையும் அம்பானியையும் கைது செய்யவில்லை? அதற்கு தைரியம் இருக்கிறதா? இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், பாஜ அரசால் கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள். இந்த முறை மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவது சாத்தியமில்லை. இவ்வாறு கார்கே பேசினார்.
The post பிரதமர் மோடி ஜெயித்தால் அடுத்து தேர்தலே இருக்காது: கார்கே கணிப்பு appeared first on Dinakaran.