×

நாட்டில் உள்ள பிரச்னைகளின் அடிப்படையில் வாக்களியுங்கள்: ராகுல் காந்தி பதிவு

டெல்லி: நாட்டில் உள்ள பிரச்னைகளின் அடிப்படையில் வாக்களியுங்கள் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஆந்திரம், தெலங்கானா, ஒடிஸா உள்ளிட்ட 9 மாநிலங்களில் 95 தொகுதிகள், ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் ஒரு தொகுதி என மொத்தம் 96 தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாட்டில் உள்ள பிரச்னைகளின் அடிப்படையில் வாக்களியுங்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; இன்று நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4-ம் தேதி இந்திய அரசு அமையப் போகிறது என்பது முதல் மூன்று கட்டங்களில் தெளிவாகிவிட்டது. உங்கள் ஒரு வாக்கு உங்கள் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பது மட்டுமல்லாமல் உங்கள் முழு குடும்பத்தின் தலைவிதியையும் மாற்றும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

1 வாக்கு = இளைஞர்களுக்கு ஆண்டுக்கு ரூ 1 லட்சம் தரும் முதல் வேலை உத்தரவாதம்.

1 வாக்கு = ஏழைப் பெண்களின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம்.

எனவே அதிக எண்ணிக்கையில் வந்து வாக்களியுங்கள், நாடு இப்போது அதன் பிரச்சினைகளின் அடிப்படையில் வாக்களிக்கும் – அது திசைதிருப்பப்படாது என்பதைக் காட்டுங்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்..

The post நாட்டில் உள்ள பிரச்னைகளின் அடிப்படையில் வாக்களியுங்கள்: ராகுல் காந்தி பதிவு appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Delhi ,Congress ,AP ,Telangana ,Odisha ,Jammu and ,Kashmir Union Territory ,
× RELATED மகாலட்சுமி யோஜனா ஏழைக்...