×

75 ஆண்டு பழமையான கட்டிடம் இடிக்கப்பட்டது ₹1.37 கோடியில் புதிய சார்பதிவாளர் அலுவலகம்

* ஓரிரு மாதங்களில் பணி நிறைவு பெறும்

* 40 வருவாய் கிராம மக்கள் பயனடைவார்கள்

வலங்கைமான், மே 13: வலங்கைமானில் 75 ஆண்டு பழமையான கட்டிடம் இடிக்கப்பட்டது. ரூ.1.37 கோடியில் புதிய சார்பதிவாளர் அலுவலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஓரிரு மாதங்களில் பணி நிறைவு பெறும், 40 வருவாய் கிராமங்கள் பயனடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.வலங்கைமான் தாலுகாவில் 71 வருவாய் கிராமங்கள் உள்ளன. கிராமங்களில் உள்ள நஞ்சை புஞ்சை மற்றும் வீடு உள்ளிட்டவைகள் தொடர்பாக பத்திரப்பதிவு செய்யும் விதமாக சார்பதிவாளர் அலுவலகம் வலங்கைமான்.

நீடாமங்கலம் மற்றும் பாபநாசம் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. இவற்றில் வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் கடந்த 1947 ம் ஆண்டு முதல் வடக்கு அக்ரஹாரம் பகுதியில் கிழக்கே கீழ விடையல், மேற்கே ஆவூர், தெற்கே ஆலங்குடி ஆகிய வருவாய் கிராமங்களை உள்ளடக்கியதாக வலங்கைமான் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ஆதிச்சமங்களம், கோவிந்தகுடி, சந்திரசேகரபுரம், தொழுவூர், செம்மங்குடி, மேல விடையல் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் இந்த பத்திரப்பதிவு அலுவலகத்தை பயன்படுத்தி வருகின்றனர். சுமார் 75 ஆண்டுகளாக மிகப் பழமையான கட்டிடத்தில் அடிப்படை வசதிகள் இன்றி பழுதடைந்த கட்டிடத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் பொதுமக்களின் தொடர் கோரிக்கையை ஏற்று புதிய கட்டிடம் கட்டுவதற்கு ஏற்ற வகையில் பயன்பாட்டில் இருந்த பழுதடைந்த பழமையான கட்டிடம் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.மேலும் அலுவலர்களின் அடிப்படை வசதிகள் மற்றும் பொதுமக்களின் தேவைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தற்காலிகமாக மாற்று இடத்திற்கு முன்னதாக சார்பதிவாளர் அலுவலகம் மாற்றம் செய்யப்பட்டது.

தற்போது போதிய இடவசதி இன்றி வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வரும் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு பழுதடைந்த பழைய கட்டிடம் இடிக்கப்பட்ட பகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் நன்னிலம் பொதுப்பணித்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உபகோட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி தரப்பட்ட கடந்த பிப்ரவரி மாதம் பணிகள் துவங்கியது. தற்போது பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஓரிரு மாதங்களில் பணிகள் முடிவு பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு புதிய பத்திரப்பதிவு அலுவலக கட்டிடம் வர உள்ளது.

The post 75 ஆண்டு பழமையான கட்டிடம் இடிக்கப்பட்டது ₹1.37 கோடியில் புதிய சார்பதிவாளர் அலுவலகம் appeared first on Dinakaran.

Tags : Valangaiman ,Dinakaran ,
× RELATED திருவாரூர் வலங்கைமான் அருகே டூவீலர் விபத்தில் வாலிபர் பலி