×

சென்னை நோக்கி வந்த அரசுப் பேருந்து, திண்டிவனம் அருகே கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி விபத்து

கடலூர்: கடலூரில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த அரசுப் பேருந்து, திண்டிவனம் அருகே கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே உள்ள மீடியனில் மோதி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்தில் இருந்த 60 பயணிகள் காயங்கள் இன்றி உயிர் தப்பினர். விபத்தால், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கடலூரில் இருந்து 60 பயணிகளுடன் புறப்பட்ட அரசுப்பேருந்து தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. தொழுப்பேடு அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையின் நடுவே உள்ள தடுப்பு கட்டையில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக லேசாய காயத்துடன் உயிர் தப்பினர். இதையடுத்து காயமடைந்தவா்களை சக பயணிகள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்

தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பேருந்தில் சிக்கிய அனைவரையும் மீட்டனர். இதனால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post சென்னை நோக்கி வந்த அரசுப் பேருந்து, திண்டிவனம் அருகே கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி விபத்து appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tindivanam ,Cuddalore ,Tambaram ,Dinakaran ,
× RELATED திண்டிவனம் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து