×

அட்சயதிருதியை ஒட்டி 2 நாட்களில் மட்டும் ரூ.15 ஆயிரம் கோடிக்கு நகைகள் விற்பனை

சென்னை: அட்சயதிருதியை ஒட்டி 2 நாட்களில் மட்டும் தமிழகத்தில் 15 ஆயிரம் கோடிக்கு நகைகள் விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தாண்டு அட்சயதிரிதியை கடந்த 10ம் தேதி அதிகாலை 4.56 மணிக்கு தொடங்கி 11-ம் தேதி மதியம் 2.50 மணிக்கு முடிவடைந்தது. 2 நாட்களும் அட்சயதிரிதியை விற்பனை என்பது தமிழகம் முழுவதும் களை கட்டியிருந்தது. குறிப்பாக சென்னையில் நகை வாங்க கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

இதுகுறித்து சென்னை தங்கம், வைர வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் சாந்தகுமார் கூறியதாவது: கடந்த ஆண்டு மட்டும் அட்சய திருதியை அன்று ரூ.11 ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனை ஆனது. இந்தாண்டு 40 சதவீதம் அளவுக்கு விற்பனை அதிகரித்துள்ளது. அதாவது, தங்கம் விலை என்பது 20 சதவீதமும், அதேநேரத்தில் விற்பனை 20 சதவீதமும் அதிகரித்து காணப்பட்டது. 2 நாட்களில் மட்டும் 22 ஆயிரம் கிலோ அளவுக்கு தங்கம் விற்பனையானது.

இதில் தங்கத்தின் மதிப்பு மட்டும் ₹14,500 கோடி அளவுக்கு இருக்கும். வெள்ளி உள்ளிட்ட நகைகள் சுமார் 500 கோடி ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தத்தில் ₹15 ஆயிரம் கோடிக்கு விற்பனை நடந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

The post அட்சயதிருதியை ஒட்டி 2 நாட்களில் மட்டும் ரூ.15 ஆயிரம் கோடிக்கு நகைகள் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Aksayatridhi ,Chennai ,Tamil Nadu ,Akshaya Thirthi ,Akshayatrithi ,Atshayatrithi ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...