×

ஆயிரம் காணி ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளைக்கு அரசு மாற்று நிலம் வழங்க வேண்டும்: முதலமைச்சருக்கு ராமதாஸ் கடிதம்

சென்னை: ஆயிரம் காணி ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளைக்கு அரசு மாற்று நிலம் வழங்க வேண்டும் என முதலமைச்சருக்கு ராமதாஸ் கடிதம் அனுப்பியுள்ளார். “சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்காக அறக்கட்டளையின் நிலம் எடுக்கப்பட்டுள்ளது. ஆயிரம் காணி ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளையின் நிலம், வன்னிய மக்களின் கல்வி, முன்னேற்றத்துக்காக வழங்கப்பட்டது. இதுவரை எடுக்கப்பட்ட நிலங்களுக்கு ஈடு செய்யும் வகையில் மாற்று நிலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

The post ஆயிரம் காணி ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளைக்கு அரசு மாற்று நிலம் வழங்க வேண்டும்: முதலமைச்சருக்கு ராமதாஸ் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Government ,Thousand Lands Governor Nayagar Foundation ,Ramadas ,Chief Minister ,Chennai ,Ruler Nayagar Foundation ,Vanniya ,Dinakaran ,
× RELATED நெல் குவிண்டாலுக்கு ரூ.700 ஊக்கத்தொகை தரவேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்