×

வீட்டு வாசலில் உறங்கியவர்கள் மீது ஏறிய கார்: வட மாநிலப் பெண் மீது வழக்குப்பதிவு

சென்னை: சென்னை அசோக் நகரில் வீட்டில் இடப் பற்றாக்குறை காரணமாக வாசலில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது கார் ஏறியது. கூகுள் மேப்பை நம்பி முட்டுச் சந்துக்குள் காரை விட்ட வட மாநிலப் பெண் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சரிதா என்பவரது இல்ல நிகழ்ச்சிக்காக உறவினர்கள் வந்திருந்ததால், வீட்டில் இடமில்லாமல் சிலர் வெளியே உறங்கியுள்ளனர். 4 பெண்கள் உள்ளிட்ட 7 பேரின் கால்கள் மீது கார் ஏறியதில் 2 பெண்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

The post வீட்டு வாசலில் உறங்கியவர்கள் மீது ஏறிய கார்: வட மாநிலப் பெண் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : State ,Chennai ,Ashok, Chennai ,
× RELATED கூகுள் மேப்பால் விபரீதம்; சென்னையில் 7...