×

கோடை மழையில் பூத்து குலுங்கும் ஈஸ்டர் லில்லி

மூணாறு, மே 12: கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் பூத்து குலுங்கும் ஈஸ்டர் லில்லி பூக்கள் காண்பவர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. பண்டைய காலங்களில் ஈஸ்டர் லில்லி பூக்கள் நீர் நிலைகளிலும், தோட்டங்களில் கால்வாய்களிலும் ஆரஞ்சு நிறங்களில் பூத்து குலுங்கும். ஆனால் தொடர்ந்து ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் லில்லி பூக்களை காண்பது அரிதாகிவிட்டது. பொதுவாக ஏப்ரல் மாதங்களில் காணப்படும் லில்லி பூக்கள் ‘ஏப்ரல் மாத பூக்கள்’ என்றும் ‘ஈஸ்டர் லில்லி பூக்கள்’ என்றும் அழைக்கப்படுகின்றன.

ஆனால் தற்போது எதிர்பாராத விதமாக பெய்த கோடை மழையில் இடுக்கி மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் உள்ள காடுகளில் மற்றும் சாலை ஓரங்களில் பூக்கள் பூத்துக் குலுங்குகிறது. பெரும்பாலான லில்லி பூக்கள் வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறங்களில் கூட்டமாக பூத்திருப்பதை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். மலையேற்றத்திற்குச் செல்லும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.

The post கோடை மழையில் பூத்து குலுங்கும் ஈஸ்டர் லில்லி appeared first on Dinakaran.

Tags : MUNARU ,KERALA STATE, ,IDUKI DISTRICT ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் விற்பனை: மாடல் அழகி உள்பட 6 பேர் அதிரடி கைது